இலங்கையில் மது மற்றும் புகைப்பிடிப்பதன் காரணமாக மாதந்தோறும் 7875 பேர் உயிரிழப்பு
ஜூலை 07,2011. மது மற்றும் புகைப் பழக்கத்தினால் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 7875 பேர்
இலங்கையில் உயிரிழப்பதாக நலத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாரடைப்பு
மற்றும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழப்பதாக அவர் கூறினார். பல்வேறு
காரணங்களுக்காக நாள் தோறும் 950 பேர் இலங்கையில் உயிரிழப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர்
மைத்திரிபால சிறிசேன, போதைக்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தை அரசாங்கம் எடுத்து நடத்துகின்ற
போதிலும், அதிகமானவர்கள் மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகக் கவலையையும்
வெளியிட்டார்.