2011-07-06 15:51:53

மியான்மார் அகதிகளுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது திருச்சபை


ஜூலை06,2011. மியான்மார் அரசுக்கும் KIA என்ற Kachin புரட்சிப் படைக்கும் இடையே நடை பெற்று வரும் சண்டையில் அகதிகளான மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது மியான்மார் திருச்சபை.
Kachin மாநிலத்தில் அகதிகளாகியுள்ள மக்களுக்கு அரிசி, மருந்துகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை அளித்து வருகிறது திருச்சபை.
சீன எல்லைப்புறத்திலுள்ள ஐந்து பங்குகள், 6,500க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு அடிப்படை நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.