ஜூலை05,2011. பாகிஸ்தானில் வெளிநாட்டவர்கள் சட்டத்துக்குப் புறம்பே கொல்லப்படுவது குறித்து
அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். ஷெஷனியர்கள் பயங்கரவாதச்
செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டதைக்
கண்டித்துப் பேசிய அருட்பணியாளர் ஒருவர், இக்கொலைகள் குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை இடம்
பெறுமாறு அழைப்பு விடுத்தார். மேலும், பாகிஸ்தானில் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு
விடுத்து இலண்டனில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஊர்வலம் நடத்தினர். பாகிஸ்தானில்
இடம் பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஊர்வலம் நடத்திய அவர்கள், பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கும்
பிற சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுமாறும் அழைப்பு விடுத்தனர். இதில் சீக்,
இந்து மற்றும் முஸ்லீம் மதங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.