சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை கத்தோலிக்கப் பெண்கள் பள்ளியினை கட்டியெழுப்ப இந்திய
ஹைகமிஷனர் உதவி
ஜூலை 04, 2011. 2004ம் ஆண்டின் சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் Payagala பெண்கள்
பள்ளியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவும் நோக்கில் 21 இலட்சத்து 80, 000 ரூபாயை
கர்தினால் மால்கம் இரஞ்சித்திடம் வழங்கியுள்ளார் அந்நாட்டிற்கான இந்திய ஹைகமிஷனர். Payagalaவின்
Holy Angel பெண்கள் பள்ளியினை மீண்டும் கட்டியெழுப்ப உதவிகள் வழங்கப்படவேண்டும் என கொழும்பு
கர்தினால் விண்ணப்பம் விடுத்ததைத் தொடர்ந்து, இதற்கு இந்நிதி உதவியை வழங்கியுள்ளார் இந்திய
ஹைகமிஷனர் Ashok Kantha