ஜூலை02,2011. இஸ்பெயினில் அமலில் இருக்கும் கருக்கலைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படுவதற்கு
அழைப்பு விடுத்து அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செப வழிபாடுகள் நடத்தப்பட்டு
வருகின்றன. இஸ்பெயினில் கருக்கலைப்புச் சட்டம் அமலுக்கு வந்து ஜூலை 5ம் தேதியோடு ஓராண்டு
ஆகும் வேளை, இச்சட்டம் மாற்றியமைக்கப்பட்டு மனித வாழ்வை ஆதரிப்பதற்கானப் புதிய சட்டங்கள்
கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக வழிபாடுகள் நடக்கின்றன. இஸ்பெயினின் 36 மாநிலங்களில்
நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வெள்ளியன்று தொடங்கப்பட்டுள்ள செப வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான
மக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வழிபாடுகள் 5ம் தேதி வரை நடைபெறும். இஸ்பெயினில்
2010ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கருக்கலைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.