போலந்தில் இரண்டாவது அனைத்துலக அப்போஸ்தலிக்க இறைஇரக்க மாநாடு
ஜூலை01,2011. இறைவனின் இரக்கத்தை அதிகமாக உணர்ந்து அதை நோக்கி மக்களை வழிநடத்துவதே திருச்சபையின்
ஒட்டு மொத்த மறைப்பணி என்று இறைஇரக்கம் குறித்த அனைத்துலக மாநாட்டின் பொதுச் செயலர் அருட்பணி
Patrice Chocholski கூறினார். வருகிற அக்டோபரில் போலந்தில் இடம்பெறவிருக்கின்ற இரண்டாவது
அனைத்துலக அப்போஸ்தலிக்க இறைஇரக்கம் மாநாடு குறித்து ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த
அருட்பணி Chocholski, இம்மாநாடு, இறைஇரக்கம் நோக்கி அகிலத் திருச்சபையையும் திருப்பும்
எண்ணம் கொண்டுள்ளது என்றார். இறைஇரக்கம் குறித்த அனைத்துலக முதல் மாநாடு உரோமையில்
2008ல் நடைபெற்றது. அதன்பின்னர் ஐந்து கண்டங்களிலும் சுமார் ஐம்பது தேசிய மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இம்மாநாட்டு
அவையின் தலைவராக ஆஸ்ட்ரியாவின் வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn இருந்து
வருகிறார்.