2011-07-01 15:38:17

அடைபட்ட துறவு வாழ்வில் 84 வருடங்கள் வாழ்ந்து வரும் ஓர் அருட்சகோதரி, உலக சாதனை படைத்துள்ளார்


ஜூலை01,2011. அடைபட்ட துறவு வாழ்வில் 84 வருடங்கள் வாழ்ந்து வரும் ஓர் அருட்சகோதரி, இத்தகைய துறவு வாழ்க்கையில் அதிகமான ஆண்டுகள் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இஸ்பெயினில், Cistercian Buenafuente del Sistal அடைபட்ட துறவு இல்லத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிறந்த அதே நாளில் சேர்ந்த அருட்சகோதரி தெரேசா, துறவு வாழ்வில் 84 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார், தற்சமயம் அச்சகோதரிக்கு வயது 103 ஆகும்.
தனது இத்தனை ஆண்டு துறவு வாழ்வு பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அருட்சகோதரி தெரேசா, இவ்வாழ்க்கையில் தான் பெற்ற மிகப்பெரும் கொடை செபம் என்று தெரிவித்துள்ளார்.
வலேரியா என்ற இயற்பெயரைக் கொண்ட அருட்சகோதரி தெரேசா, 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி துறவு சபையில் சேர்ந்தார்.







All the contents on this site are copyrighted ©.