ஜூன் 30,2011. பாங்காக் நகரை “உலக புத்தகத் தலைநகர் 2013” என்று ஒரு சர்வதேச குழு குறித்திருப்பதாக
யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனம் அறிவித்தது. உலக
அச்சகங்கள் மற்றும் யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்ட ஒரு சர்வதேச குழு, இப்புதனன்று பாரிசில்
கூட்டம் நடத்திய போது பாங்காக்கை 13வது உலக புத்தகத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது என்று
யுனெஸ்கோ அறிவித்தது. பல்வேறு புத்தகங்களைக் கொண்டு வருவதற்கு பாங்காக் இசைவு தெரிவித்ததையொட்டி
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டில் இந்தியாவின் புதுடெல்லி உலக புத்தகத்
தலைநகராக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.