2011-06-28 16:37:17

போரினால் இடம்பெயர்ந்த இலங்கை மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை


ஜூன் 28, 2011. இலங்கை அரசு கூறுவதுபோல் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை எனவும், வன்னியில் எங்கும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு, பௌத்தக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும்,போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் குறித்த உண்மை நிலையை அறிய மலேசியாவில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் இலங்கைக்குப் பயணம் செய்து திரும்பிய ஒரு குழுவினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மீள்குடியமர்த்தி விட்டோம் என இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் சொல்வதில் உண்மையில்லை என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிந்தது எனக்கூறும் இக்குழு, 30 ஆண்டுகாலப் போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர், 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தது.
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட எல்லோரும் முழுமையாக மீள் குடியமர்த்தப்படவில்லை. இன்னும் இரண்டு பெரிய முகாம்கள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன என மேலும் கூறியது, அண்மையில் இலங்கையிலிருந்து திரும்பிய இக்குழு.







All the contents on this site are copyrighted ©.