2011-06-27 16:33:52

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட அழைப்பு விடுத்துள்ளார் ஸ்காட்லாந்து கர்தினால்


ஜூன் 27, 2011. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஸ்காட்லாந்து கர்தினால் Keith Patrick O'Brien.
கடந்த இரண்டு மாதங்களில் கிறிஸ்தவர்கள் மீதான 14 தாக்குதல்கள் இடம்பெற்றதற்கு பாகிஸ்தானின் தேவ நிந்தனைச்சட்டமே காரணம் எனக்கூறி அச்சட்டம் நீக்கப்பட் அழைப்பு விடுத்திருக்கும் 'Aid to the Church in Need' என்ற கத்தோலிக்க அமைப்பின் முயற்சிக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார் கர்தினால்.
கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்கத் தவறியுள்ள பாகிஸ்தான் அரசிற்கான உதவிகளை இருமடங்காக்கியுள்ள இங்கிலாந்து அரசின் செயல்பாட்டையும் குறைகூறியுள்ளார் கர்தினால் O'Brien







All the contents on this site are copyrighted ©.