ஓர் இந்திய இறையடியார் உட்பட 15 பேரின் பெயர்கள் புனிதர் பட்டப் படிகளுக்கென பரிந்துரை
ஜூன் 27, 2011. புனிதர்களாக அறிவிப்பதற்கான படிகளுக்கென ஓர் இந்திய இறையடியார் உட்பட
15 இறையடியார்களின் பெயர்களை இத்திங்களன்று பெற்று அதற்கான தனது ஒப்புதலையும் வழங்கியுள்ளார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். புனிதர்படிநிலைகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால்
ஆஞ்சலோ அமாத்தோவிடம் இருந்து இப்பெயர்களுக்கானப் பரிந்துரைகளைப் பெற்ற திருத்தந்தை நான்கு
இறையடியார்களிடம் வேண்டியதால் நிகழ்ந்த புதுமைகள், மறைசாட்சியாக உயிரிழந்த மூன்று இறையடியார்களின்
பெயர்கள், வீரத்துவ பண்புகளுக்காக எட்டு இறையடியார்களின் பெயர்கள் ஆகியவைகளை ஏற்று ஒப்புதல்
வழங்கினார். வணக்கத்துக்குரிய இறையடியார்கள், இத்தாலியின் Mariano Arciero, பிரான்சின்
Giovanni Giuseppe Lataste, மெக்ஸிகோவின் Maria Agnese Teresa, ஜெர்மனியின் Ildegarda
Burjan ஆகியவர்களிடம் வேண்டியதால் நிகழ்ந்த புதுமைகள் திருத்தந்தையின் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மறைசாட்சியாக
உயிரிழந்த இஸ்பெயினின் இறையடியார்கள் Salvio Huix Miralpeix, Giuseppa Martínez Pérez,
ஆஸ்திரியாவின் இறையடியார் Carlo Lampert ஆகியவர்களின் பெயர்களுடன், தங்கள் வீரத்துவ பண்புகளுக்காக,
இந்தியாவின் Matteo Kadalikattil, இத்தாலியின் முத்திப்பெற்ற Giovanni Marinoni, இறையடியார்கள்
Raffaele Dimiccoli, Maria Giuseppina Benvenuti, Laura Meozzi, Luigia Tincani, இஸ்பெயினின்
Giuseppe Maria García Lahiguera போலந்தின் Sofia Czeska-Maciejowska ஆகியோர்களின் பெயர்களும்
புனிதர் பட்ட நிலைக்கானப் படிகளுக்கென திருத்தந்தையின் ஒப்புதலைப் பெற்றுள்ளன.