நாத்சி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் குருக்கள் அருளாளர்கள் என அறிவிக்கப்படவிருக்கின்றார்கள்
ஜூன்25,2011. 1943ம் ஆண்டில் நாத்சி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட மூன்று இளம் குருக்கள்
இஞ்ஞாயிறன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கின்றார்கள். மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட
Johannes Prassek, Hermann Lange, Eduard Muller ஆகிய மூன்று குருக்களுடன் லூத்தரன் கிறிஸ்தவ
சபையைச் சேர்ந்த போதகர் Karl Friedrich Stellbrink என்பவரும் கொல்லப்பட்டார். திருத்தந்தையின்
பெயரில் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, அருளாளர் நிலைக்கு உயர்த்தும் இத்திருப்பலியை நிகழ்த்துவார்.