விதவைகளுக்கு ஆதரவு காட்டுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்
ஜூன்24,2011. விதவைகளுக்கு மரபுரிமை, நிலவுரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பிற வாழ்க்கை வசதிகளை
வழங்கி அவர்களுக்கு ஆதரவு காட்டுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்தினார். பெண்களுக்கு
எதிரான எல்லா வகையானப் பாகுபாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தில்
குறிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளாலும் விதவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பான்
கி மூன் கேட்டுள்ளார். ஜூன் 23, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட முதல் அனைத்துலக விதவைகள்
தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். உலகில்
சுமார் 24 கோடியே 50 இலட்சம் விதவைகள் உள்ளனர். இவர்களில் 11 கோடியே 50 இலட்சம் விதவைகள்
கடும் வறுமையில் வாழ்கின்றனர்.