ஜூன்24,2011. இவ்வெள்ளிக்கிழமை முற்பகலில் மொந்தேநெக்ரோ பிரதமர் Igor Luksic, திருத்தந்தையைத்
திருப்பீடத்தில் சந்தித்தார். அதன்பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ
பெர்த்தோனே, நாடுகளுடனான உறவுகளுக்கானச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும்
சந்தித்தார் மொந்தேநெக்ரோ பிரதமர். இச்சந்திப்பில் மொந்தேநெக்ரோ குடியரசுக்கும் திருப்பீடத்திற்கும்
இடையேயான அடிப்படை ஒப்பந்தம் குறித்துப் பேசப்பட்டது. மேலும், அந்நாட்டில் கத்தோலிக்கத்
திருச்சபை மற்றும் அதன் நிறுவனங்களின் சட்டரீதியான இருப்பு, அந்நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து
அந்நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உறவுகள், தற்போதைய சர்வதேச நிலவரம்,
பல மதத்தவர் மத்தியில் நல்லிணக்க வாழ்வை ஊக்குவித்தல் போன்ற விவகாரங்களும் பேசப்பட்டன.