2011-06-23 14:16:28

ஜப்பானில் Sendai மறைமாவட்டத்தைக் கட்டியெழுப்ப ஜப்பான் ஆயர் பேரவை முடிவு


ஜூன் 23,2011. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்த சுனாமியால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் Sendai மறைமாவட்டத்திற்குத் தேவையான உதவிகளை அதிகரிக்கவும், அம்மறைமாவட்டத்தைக் கட்டியெழுப்பவும் ஜப்பான் ஆயர் பேரவை முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் நடந்து முடிந்த ஜப்பானிய ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில், Sendai மறைமாவட்டத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 கோடி Yen அதாவது, 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் அனுப்புவதற்கு ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.
ஜப்பானில் பிற மறைமாவட்டங்களில் பணிபுரியும் குருக்களையும், துறவறத்தாரையும் Sendai மறைமாவட்டத்திற்கு அனுப்பி, அப்பகுதியைக் கட்டியெழுப்பும் பணிகளைத் துரிதப்படுத்தவும் ஆயர் பேரவை முடிவு செய்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.