இத்தாலி நாட்டின் நற்கருணை மாநாட்டின் இறுதி நாளன்று திருத்தந்தை அம்மாநாட்டில் கலந்து
கொள்கிறார்
ஜூன் 22,2011. செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இத்தாலி நாட்டின் நற்கருணை மாநாட்டின்
இறுதி நாளன்று திருத்தந்தை அம்மாநாட்டில் கலந்து கொண்டு திருப்பலி ஆற்றி, மாநாட்டை நிறைவு
செய்வார் என்று வத்திக்கான் செய்தி அலுவலகம் கூறியுள்ளது. "இறைவா, நாங்கள் யாரிடம்
செல்வோம்? தினசரி வாழ்வில் நற்கருணை" என்ற தலைப்பில் செப்டம்பர் 3ம் தேதி முதல் 11ம்
தேதி வரை இத்தாலியின் Ancona நகரில் நடைபெறும் 25வது நற்கருணை மாநாட்டின் நிகழ்ச்சிகள்
குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மாநாட்டின்
இறுதி நாளான செப்டம்பர் 11 ஞாயிறன்று திருத்தந்தை Ancona நகரின் கப்பல் கட்டும் தளத்தில்
திருப்பலி நிறைவேற்றுவார் என்றும் அன்று மாலை இளையோரை அந்நகரின் திறந்த வெளி சதுக்கத்தில்
சந்தித்து உரையாற்றுவார் என்றும் வத்திக்கான் செய்திக்குறிப்பு கூறுகிறது. இத்தாலியின்
சிறந்த ஓவியர்கள் நற்கருணை, திருவிருந்து ஆகிய கருத்துக்களில் வரைந்துள்ள பல ஓவியங்கள்
இந்த மாநாட்டையொட்டி, ஒரு கண்காட்சியாக அமைக்கப்படும் என்றும், செப்டம்பர் 2ம் தேதி திறக்கப்படும்
இந்த கண்காட்சி வரும் ஆண்டு சனவரி மாதம் 8ம் தேதி வரை Ancona நகரில் நடைபெறும் என்றும்
இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.