2011-06-20 16:19:42

குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கருத்தரங்கு


ஜூன் 20, 2011. குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகள் குறித்து ஆராயும் அனைத்துலகக் கருத்தரங்கு வரும் பிப்ரவரி 6 முதல் 9 வரை உரோம் நகரின் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற உள்ளது.
'குணப்படுத்தலையும் புதுப்பித்தலையும் நோக்கிய கருத்தரங்கம்' என்ற தலைப்பில் இடம்பெற உள்ள இந்தச் சந்திப்பில் உலகின் ஆயர் பேரவைகள் மற்றும் துறவு சபைகளின் 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் மருத்துவர்கள், மனஇயல் வல்லுனர்கள், சமூகவியலாளர்கள், இறையியலாளர்கள் என பல்வேறு துறையினரின் உரைகளும் இடம்பெறும் என்றார் இக்கருத்தரங்கிற்கான தயாரிப்பு அவையின் தலைவர் இயேசு சபை குரு Hans Zollner.








All the contents on this site are copyrighted ©.