2011-06-18 17:13:47

ஜூன் 19, வாழந்தவர் வழியில்...


Charles Haddon Spurgeon அதிகப் புகழ் பெற்ற ஒரு Baptist மறையுரையாளர். இவர் 1834ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 'மறையுரையாளர்களின் இளவரசன்' என்ற பட்டத்திற்கு உரியவராக விளங்கிய Charles, தன் வாழ்நாளில் ஒரு கோடிக்கும் மேலான மக்களுக்கு மறையுரைகள் ஆற்றியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
வாரத்தில் ஒரு முறை மட்டுமே மறையுரைகள் வழங்கப்பட்ட அக்காலத்தில், மக்களின் வேண்டுகோளை ஏற்று, பல வேளைகளில் இவர் ஒரு வாரத்தில் பத்து முறைகளுக்கு மேல் மறையுரைகள் வழங்கியுள்ளார். இவர் Baptist பிரிவைச் சார்ந்தவர் என்றாலும், இவரது மறையுரைகளை அனைத்துக் கிறிஸ்தவப் பிரிவினரும் ஆர்வமாய் கேட்டனர், விரும்பி வாசித்தனர்.
மறையுரைகள், செபங்கள் குறித்த விளக்கங்கள், சுய வரலாறு என்று பலவகை நூல்களை Charles எழுதியுள்ளார். உலகின் பல மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. 1857ம் ஆண்டு, தனது 23ம் வயதில் இவர் ஆரம்பித்த ஒரு பிறரன்பு பணி நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருகிறது. 1892ம் ஆண்டு தனது 58 வது வயதில் இவர் இறையடி சேர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.