தமிழகத்தின் ஒரு ஆயரும், சத்திஸ்கர் மாநிலத்தின் மூன்று ஆயர்களும் திருத்தந்தையுடன்
சந்திப்பு
ஜூன் 17,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்தும்,
சத்திஸ்கர் மாநிலத்திலிருந்தும் உரோம் நகர் வந்துள்ள அனைத்து ஆயர்களுக்கும் திருத்தந்தை
தன் உரையை வழங்குவதற்கு முன், தஞ்சாவூர் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், அம்பிகாபூர் ஆயர் பத்ராஸ்
மின்ஜ், ஜஷ்பூர் ஆயர் எம்மானுவேல் கெர்கெட்டா, ரைகர் ஆயர் பால் டொப்போ ஆகியோரை ஒரு குழுவாகச்
சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவருடனும் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.