2011-06-17 14:25:37

ஒரிஸ்ஸாவில் திட்டமிடப்படும் இரும்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்கள் கைது - தலத்திருச்சபை கண்டனம்


ஜூன் 17,2011. ஒரிஸ்ஸாவில் தென் கோரிய நிறுவனம் ஒன்று அமைக்கவிருக்கும் இரும்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்களைக் காவல் துறையினர் கைது செய்திருப்பதைத் தலத்திருச்சபை வன்மையாக கண்டனம் செய்துள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த POSCO என்ற நிறுவனம் ஒரிஸ்ஸாவில் 2900 ஏக்கர் காட்டுப்பகுதி நிலம் உட்பட, 4004 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பெரும் இரும்பு ஆலையை கட்டுவதற்கு ஒரிஸ்ஸா அரசு ஒப்புதல் தந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வாழும் பல்லாயிரம் மக்கள் தங்கள் நிலங்களை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.
மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அரசு அளித்துள்ள இந்த உத்தரவை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களில் 200 பேருக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மற்றும், அப்பகுதி மக்களை இடம்பெயரச் செய்வதற்கு அரசு பல்வேறு அடக்கு முறைகளையும் கையாண்டு வருகிறதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஒரிஸ்ஸாவின் தலைநகர் புபனேஸ்வரில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த ஆலை 12 பில்லியன் டாலர், அதாவது, 1200 கோடி டாலர் மதிப்பில் கட்டப்படும் ஓர் ஆலை என்றும், இதுவரை இந்தியாவில் அந்நிய நாட்டிலிருந்து நேரடியாக முதலீடு செய்து கட்டப்படும் ஆலைகளில் இதுவே மிக அதிக மதிப்பில் கட்டப்படுகிறதென்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.









All the contents on this site are copyrighted ©.