திருப்பீடத்திற்கும், இஸ்ரேல் நாட்டிற்கும் இடையேயான நிரந்தரப் பணிக்குழுவின்
நிறையமர்வுக் கூட்டம்
ஜூன் 15,2011. திருப்பீடத்திற்கும், இஸ்ரேல் நாட்டிற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான
நிரந்தரப் பணிக்குழுவின் நிறையமர்வுக் கூட்டம் வத்திக்கானில் இச்செவ்வாயன்று இடம்பெற்றது. இஸ்ரேல்
வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் Danny Ayalon தலைமையில் 13 பேர் அடங்கியக் குழுவும்,
வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படும் உறவுகளுக்கான வத்திக்கான் துறையின் நேரடிச் செயலர் Mons.
Ettore Balestrero தலைமையில் இஸ்ரேலுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Franco
உட்பட 9 பேர் அடங்கிய குழுவும் இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்து விவாதித்தன. இவ்விரு
குழுக்களுக்கிடையே அடுத்தக் கட்டப் பேச்சு வார்த்தைகள் இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல்தேதி
இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.