ஐரோப்பியக் குடியேற்றதாரர் இணைப்புக் கூட்டத்தில் பேராயர் Antonio Maria Veglio
ஜூன் 15,2011. இப்புதனன்று உரோம் நகரில் இடம்பெற்ற ஐரோப்பியக் குடியேற்றதாரர் இணைப்புக்
கூட்டத்தில், குடியேற்றதாரர்களிடையே திருச்சபை ஆற்றிவரும் மெய்ப்புப் பணிகள் குறித்து
தன் கருத்துக்களை வழங்கினார் பேராயர் Antonio Maria Veglio. 1800ம் ஆண்டுகளிலேயே குடியேற்றதாரர்களிடையே
திருச்சபையின் பணி மிகத் தீவிரமாக இருந்தது என்று கூறிய குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப்
பயணிகளின் மேய்ப்புப் பணிக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Veglio, இரண்டாம் உலகப்
போர் காலத்தில் இப்பணி உச்சகட்டத்தை அடைந்தது என்று கூறினார். அகதிகள் மற்றும் குடியேற்றதாரர்
மத்தியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து திருமறை ஏடுகள் எடுத்துரைத்துள்ளது பற்றியும்
சுட்டிக் காட்டிய பேராயர், சில நாடுகளில் பிரச்சனைகளால் மக்கள் வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ள
அதே வேளை, அவர்கள் குடியேறும் நாடுகளிலும் உருவாகும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கி,
ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பல்வேறு கலாச்சாரங்கள் சந்திப்பதன்
வழியாக ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்பதும் பேராயர் Veglioவால் எடுத்துரைக்கப்பட்டது.