மத்திய ஆப்ரிக்கக் குடியரசிற்கு சர்வதேச சமுதாயத்தின் அனைத்து விதமான உதவிகளுக்கு ஆயரின்
அழைப்பு
ஜூன் 14,2011. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் பாதுகாப்பற்ற நிலைகள் அதிகரித்து வருவதை
எதிர்கொள்ள, சர்வதேச சமுதாயத்தின் அனைத்து விதமான உதவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்
அந்நாட்டு ஆயர் ஒருவர். மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நிலவி வரும் பாதுகாப்பற்ற நிலைகளால்
மக்கள் ஏமாற்றத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வடக்கு மற்றும்
வடகிழக்குப் பகுதியில் அமைதியைச் சீர்குலைத்து வரும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் தண்டனைப்
பயமின்றி செயல்படுவதாகவும் கூறினார் அந்நாட்டின் Kaga-Bandoro பேராயர் Albert Vanbuel.