தமிழகத்தின் ஆறு ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு
ஜூன் 10,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்து
உரோம் நகர் வந்துள்ள ஆறு ஆயர்களை இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில்
சந்தித்து வரும் திருத்தந்தை, இவ்வெள்ளி காலை செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் அந்தோணிசாமி,
கோவை ஆயர் தாமஸ் அக்வினாஸ், உதகமண்டல ஆயர் அமல்ராஜ் அருளப்பன், வேலூர் ஆயர் சவுந்தரராஜ்
பெரியநாயகம், திண்டுக்கல் ஆயர் அன்டனி பாப்புசாமி மற்றும் கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்
ஆகியோரைக் ஒரு குழுவாகச் சந்தித்து, அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார். இதே
நாளில் திருப்பீடப் பணிகளுக்கானக் கல்விக் கழகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து திருப்பீடத்தின்
பிற நாடுகளுடனான உறவுகள் குறித்த உரை ஒன்றையும் திருத்தந்தை வழங்கினார்.