பாகிஸ்தானில் கிறிஸ்தவ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது குறித்து
தலத்திருச்சபை அதிகாரிகள் கவலை
ஜூன் 08,2011. பாகிஸ்தானில் இயங்கி வந்த இரு கிறிஸ்தவ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்று
நிறுத்தப்பட்டுள்ளது குறித்து தலத்திருச்சபை அதிகாரிகள் கவலையை வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானில்
கராச்சி மற்றும் லாகூர் ஆகிய இரு உயர்மறைமாவட்டங்கள் நற்செய்தி தொலைக்காட்சி என்ற அலைவரிசைகளை
நடத்தி வந்தன. இவ்விரண்டில், கடந்த ஐந்து மாதங்களாய் கராச்சி அலைவரிசை நிறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரப் பிரச்சனை மற்றும் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளே இந்த அலைவரிசை
தொடர்ந்து இயங்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்று UCAN செய்தி கூறுகிறது. 2009ம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நற்செய்தி அலைவரிசை நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டாலும்,
இதனைத் தொடர்ந்து நடத்துவதற்குரிய பொருளாதார வசதிகளும், கேபிள் நிறுவனங்களை நடத்துகிறவர்களின்
தொடர்ந்த ஆதரவும் இல்லாததால் இந்த நிலை உருவாகியுள்ளதென்று லாகூரின் முன்னாள் பேராயர்
லாரன்ஸ் சல்தானா கூறினார்.