சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு குருக்களும்
சமூக நல ஆர்வலர்களும் எதிர்ப்பு
ஜூன் 08,2011. இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள 14 சிறு தீவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கென
இலங்கை அரசு திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளை அங்குள்ள குருக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள்
எதிர்த்து வருகின்றனர். அரசின் இந்த திட்டங்களால் இத்தீவுகளில் மீன்பிடித் தொழிலை
நம்பி வாழும் 10000 மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று இத்திட்டங்களை எதிர்க்கும்
குழுவினர் தெரிவித்துள்ளனர். Kalpitiya சுற்றுலாப் பகுதி என்று அழைக்கப்படும் இந்த
திட்டத்தில் உள்ளடங்கியப் பகுதிகளில் வாழும் மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் எதிர்காலத்தை
எண்ணி பயந்து வாழ்கின்றனர் என்று கத்தோலிக்கக் குரு Sarath Iddamalgoda செய்தியாளர்களிடம்
இத்திங்களன்று கூறினார். இத்திட்டங்களால் அப்பகுதிகளில் நுழைந்துள்ள பல தனியார் நிறுவனங்கள்
ஏற்கனவே அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் பல முயற்சிகளில் இறங்கியுள்ளனர்
என்று சமூகநல ஆர்வலர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினர். 1673 ஹெக்டேர் நிலப்பரப்பைக்
கொண்ட இந்த 14 சிறு தீவுகளில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்கள் மற்றும்
இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.