Iதிருத்தூதர் பணிகள் 1: 1-11 IIபுனித
பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகம் 1: 17-23
மத்தேயு நற்செய்தி
28: 16-20 அக்காலத்தில், பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப்
பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள்.
சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும்
எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்;
தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட
யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான்
உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.