Sendai மறைமாவட்ட மக்கள் வாழ்வைக் கட்டியெழுப்பும் 'புதுப் படைப்பு'
திட்டம்
ஜூன் 03,2011. ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி ஆகியவற்றைச் சந்தித்த Sendai மறைமாவட்டம்,
மக்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு 'புதுப் படைப்பு' என்ற பெயரிட்டுள்ளது. மக்களின்
குடியிருப்புகளையும் அவர்கள் வாழ்வையும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் தலத்திருச்சபை
புதியதொரு படைப்பாய் விளங்குவதும், அதன் வழியாக மக்களுக்கு நம்பிக்கையை வளர்க்கும் ஒரு
சாதனமாகத் திகழ்வதுமே தங்கள் குறிக்கோள் என்று செண்டை ஆயர் Martin Tetsuo Hiraga கூறினார். ஜப்பான்
காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன் செயல்படும் இத்திட்டத்தில் கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது,
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் உதவிகள்
வழங்கப்படுகிறதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது. அண்மைய மறைமாவட்டங்களான Niigata,
Saitama, Sapporo மற்றும் Tokyo உயர்மறைமாவட்டம் ஆகியவைகளின் ஒத்துழைப்பும் 'புதுப் படைப்பு'
என்ற இத்திட்டத்திற்குக் கிடைத்துள்ளதென்று ஆயர் Hiraga சுட்டிக் காட்டினார்.