2011-06-01 16:08:53

புனித இசைக்கென உருவாக்கப்பட்ட பாப்பிறை நிறுவனத்தின் நூற்றாண்டையொட்டி திருத்தந்தையின் செய்தி


ஜூன் 01,2011. புனித பெரிய கிரகோரியால் உருவாக்கப்பட்ட புனித இசையின் பாரம்பரியத்தைத் தொடர்வது முக்கியம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித இசைக்கென உருவாக்கப்பட்ட பாப்பிறை நிறுவனத்தின் நூற்றாண்டையொட்டி, இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் கர்தினால் Zenon Grocholewskiக்கு திருத்தந்தை இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் இசைப் பிரியர்கள் அனைவருக்கும் இது மகிழ்வைத் தரும் ஒரு நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்று நிலவிய பல்வேறு இசைவடிவங்களில் இருந்து வழிபாடு சார்ந்த இசையை வேறுபடுத்த திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர் 1911ம் ஆண்டு புனித இசைக்கான பாப்பிறை நிறுவனத்தை உருவாக்கி, புனித இசையில் கொணர்ந்த ஆழமான மாற்றங்களைத் திருத்தந்தை தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனைப் புகழ்வதும், விசுவாசிகளின் மனங்களை இறைவன்பால் எழுப்புவதுமே புனித இசையின் முக்கியப் பணிகள் என்று கூறிய திருத்தந்தை, திருச்சபையில் கிரகோரியன் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்வது இன்றும் நமக்குத் தேவையான ஓர் அம்சம் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.