தபால் தலைகள் மூலம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலைக் கௌரவித்துள்ளது பிலிப்பீன்ஸ் அரசு
மே 30,2011. முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அருளாளராக அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும்
விதமாக இத்திங்களன்று அவர் உருவங்களைத் தாங்கிய நான்கு வகையான தபால்தலைகளை வெளியிட்டுள்ளது
பிலிப்பீன்ஸ் அரசு. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பிலிப்பீன்ஸ் நாட்டில் திருப்பயணம்
மேற்கொண்டபோது சந்தித்த நான்கு வெவ்வேறு இடங்களின் பின்னணியில் அவரின் படத்துடன் இத்தபால்தலைகள்
அந்நாட்டின் 7 பேசோஸ் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளன. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
1981, 1995 ஆகிய ஆண்டுகளில் பிலிப்பீன்சில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளார்.