2011-05-26 15:48:19

கத்தோலிக்க சீரோ மலபார் ரீதி சபையின் புதியத் தலைவராக ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி


மே 26,2011. கத்தோலிக்க சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவராக தக்கலை ஆயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தன் ஒப்புதலை வழங்கி அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
எர்ணாகுளம்-அங்கமலி பேராயராகவும் சீரோ மலபார் ரீதி சபையின் தலைவராகவும் செயல் பட்டு வந்த கர்தினால் வர்கி விதயத்தில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி தன் 84ம் வயதில் இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து, கொச்சியின் காக்கநாடில் கூடிய சீரோ மலபார் ரீதி ஆயர்களால் கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை ஆயர் ஆலஞ்சேரி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கணாச்சேரி உயர்மறைமாவட்டத்தின் துருத்தி எனுமிடத்தில் 1945ம் ஆண்டு ஏப்ரல் 19ம்தேதி பிறந்த ஆயர் ஆலஞ்சேரி, 1972ம் ஆண்டுக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
பாரீஸ் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தில் பயின்று மறைக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் இவர்.
1997ம் ஆண்டு ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், தக்கலை சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்துள்ளார். இச்செவ்வாயன்று சீரோ மலபார் ரீதியின் தலைவராக ஆயர் ஆலஞ்சேரி தேர்ந்த்தெடுக்கப்பட்டதை இப்புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அங்கீகரித்தார்.








All the contents on this site are copyrighted ©.