2011-05-23 16:38:51

வியட்நாம் அரசின் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து கர்தினால் Minh Man கவலை


மே 23,2011. திருச்சபை தொடர்புடைய நடவடிக்கைகளில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கில் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொணர வியட்நாம் அரசு முயன்று வருவதாகக் கவலையை வெளியிட்டுள்ளார் கர்தினால் Jean Pham Minh Man.
Saigon உயர் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Minh Man, வியட்நாம் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போது மதத்திற்கு எதிராக முன் வைக்கப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம், நம்பிக்கைகளுக்கும், மதங்களுக்கும் மட்டுமல்ல, அரசியலமைப்பிற்கே மதிப்புக் குறைவான செயல்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மதம் சார்ந்த எந்த ஓர் உரிமையும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் வைக்கப்பட்டு அவர்களின் அனுமதி பெற்றபிறகே செயல்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்திருத்த மசோதா, மதச் சமூகங்களைக் கட்டுப்படுத்த மட்டுமல்ல, அரசு அதிகாரிகளே அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை வழங்கவும் உதவுகிறது என்றும் கர்தினால் Minh Man தன் கடிதத்தில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.