சர்வதேச காரித்தாஸ் அமைப்பில் குறிப்பிடத்தக்க புதுப்பித்தல் இடம்பெறவேண்டும் என்கிறார்
கர்தினால் ரொட்ரிக்கோஸ் மரதியாகா
மே 23, 2011. இரண்டாம் வத்திக்கான் பொது அவையைத் தொடர்ந்து, திருச்சபையில் இடம்பெற்ற
மாற்றங்கள் போல், தற்போது சர்வதேச காரித்தாஸ் அமைப்பில் குறிப்பிடத்தக்க புதுப்பித்தல்
இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரிக்கோஸ் மரதியாகா. சர்வதேச
காரித்தாஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் 60ம் ஆண்டையொட்டி உரோம் நகரில் இடம்பெறும்
அதன் 19வது பொதுஅவைக் கூட்டத்தில் துவக்க உரையாற்றிய அவ்வமைப்பின் தலைவர் கர்தினால் ரொட்ரிக்கோஸ்
மரதியாகா, ஒரே குடும்பமாக ஏழ்மையற்ற நிலைகளுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், அநீதியையயும்
ஏழ்மையையும் எதிர்த்துப் போரிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஏழ்மையை அகற்றுவதற்கானச்
சிறந்த வழிகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என அப்பொதுஅவையில் பங்குபெறுவோரை நோக்கி
அழைப்பு விடுத்த அவர், எழைகளுக்குப் பணிபுரிவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.