2011-05-23 16:29:43

இறைவன் மீதான விசுவாசமும், இயேசு கிறிஸ்து மீதான விசுவாசமும் இரு வேறு செயற்பாடுகள் அல்ல


மே 23, 2011. இறைவன் மீதான விசுவாசமும், இயேசு கிறிஸ்து மீதான விசுவாசமும் இரு வேறு செயற்பாடுகள் அல்ல, மாறாக விசுவாசத்தின் ஒரே செயல்பாடு என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்துவே வழி, உண்மை மற்றும் வாழ்வு என்பது குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் போது தன் கருத்துக்களை வழங்கியத் திருத்தந்தை, இறைவன் கண்ணுக்குப் புலப்படாதவர் என்ற எண்ணம் புதிய ஏற்பாட்டில் மறைந்து, இறைவன் தன் முகத்தைக் காண்பித்தார் என்றார்.
மனு உரு எடுத்தல், மரணம், மற்றும் உயிர்ப்பின் வழி, இறைமகன் நம்மைப் பாவங்களிலிருந்து விடுவித்து, நமக்கு இறைவனின் குழந்தைகளுக்குரிய சுதந்திரத்தை வழங்கி, இறைவனின் முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த முகமே அன்பு என மேலும் கூறிய திருத்தந்தை, இறைவன், கிறிஸ்துவில் காணக்கூடியவராக இருந்தார் எனவும் தெரிவித்தார்.
இயேசுவின் உண்மை எனும் வார்த்தைகளால் வழிநடத்தப்பட நம்மையே நாம் அனுமதிப்பதே இறைவனைச் சென்றடைவதற்கான சிறந்த வழி எனவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.