திருச்சபையின் பணிகளை பாராட்டுகிறார் எயிட்ஸ் வல்லுனர்
மே 21, 2011. ஹெச்.ஐ.வி. பாதிப்பாளர்கள் மற்றும் எயிட்ஸ் நோயாளிகளிடையே திருச்சபை ஆற்றி
வரும் பணிகளுக்குத் தன் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளார் பிலிப்பீன்ஸின் எய்ட்ஸ் கழகத்தின்
தலைவர் ஒஃபேலியா மோன்சொன். எய்ட்ஸ் நோயைக் குறித்த தப்பெண்ணங்கள் மற்றும் அந்நோயாளிகள்
பாகுபாட்டுடன் நடத்தப்படுவது குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய இவர், இந்நோய் பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளோரிடையே ஆலோசனைகள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கும் திருச்சபையின் பணி மிகவும்
பாராட்டுக்குரியது என்றார். எய்ட்ஸ் நோய்க்கிருமிகள் குறித்து மக்களுக்கு கல்வி மூலமான
விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே இந்நோயை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும் என
இக்கருத்தங்கில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.