2011-05-21 15:26:55

உரோமையில் சர்வதேச காரித்தாஸின் பொது அவைக் கூட்டம்


மே 21, 2011. சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் 19வது பொதுஅவைக் கூட்டம் இஞ்ஞாயிறு முதல் வரும் வெள்ளி வரை உரோம் நகரில் இடம்பெறுகிறது.
கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு சேவை அமைப்புகள் இணைந்து சர்வதேச காரித்தாஸ் அமைப்பாகத் துவக்கப்பட்டதன் 60ம் ஆண்டையொட்டி இடம்பெறும் இப்பொதுஅவைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 300 பிரதிநிதிகள் பங்குபெறுகின்றனர்.
165 நாடுகளின் காரித்தாஸ் அமைப்புகளை ஒன்றிணைத்து, கர்தினால் ஆஸ்கர் அந்த்ரேஸ் ரொட்ரிக்குஸ் மரதியாகா தலைமையில், மக்களின் துயர் துடைக்க உழைத்து வரும் சர்வதேச காரித்தாஸ் அமைப்பு, அடுத்த 4 ஆண்டுகளுக்கானப் பணித்திட்டங்கள் குறித்து இப்பொதுஅவைக் கூட்டத்தில் விவாதிக்கும்.








All the contents on this site are copyrighted ©.