புதிய மறைபரப்புப் பணிகளுக்கான திருப்பீட அவையின் முக்கிய ஆலோசகர்கள் திருத்தந்தையால்
நியமனம்
மே 20,2011. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புதிதாக உருவாக்கிய
புதிய மறைபரப்புப் பணிகளுக்கான திருப்பீட அவையின் முக்கிய ஆலோசகர்களை இவ்வியாழனன்று திருத்தந்தை
நியமித்தார். இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பல்கலை கழகத்தின் அதிபர் அருள்தந்தை
Francois-Xavier Dumortier, சலேசிய சபைத் தலைவர் Pascual Chavez Villanueva, உட்பட திருச்சபையின்
பல துறவறச் சபைகள், இன்னும் பிற பணிக்குழுக்கள் ஆகியவற்றின் முக்கியமான பொறுப்பில் உள்ளவர்களை
பத்து ஆலோசகர்களாக திருத்தந்தை நியமித்தார். பேராயர் Salvatore Fishchella தலைமையில்
இயங்கும் இந்தத் திருப்பீட அவையின் செயலராக பேராயர் Jose Octavia Ruiz ஐ கடந்த வாரம்
திருத்தந்தை நியமித்தார்.இந்த நியமனங்களால் திருத்தந்தை உருவாக்கிய இந்தப் புதியத் திருப்பீட
அவை முழு வடிவம் பெற்றுள்ளதாக வத்திக்கானில் இருந்து வெளியாகும் செய்திகள் கூறுகின்றன.