கர்தினால் டெலஸ்ஃபோர் டோப்போ மற்றும் ஜார்கண்ட் ஆயர்களை சந்தித்து உரையாடினார் திருத்தந்தை
மே 19,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம்
நகர் வந்துள்ள கர்தினால் டெலஸ்ஃபோர் டோப்போ மற்றும் ஜார்கண்ட் ஆயர்களை இவ்வியாழனன்று
காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஏற்கனவே
இத்திங்களன்று காலை வடகிழக்கு இந்தியா, பீகார், ஜார்கண்ட், அந்தமான் நிக்கோபார், ஒரிசா
மற்றும் மேற்கு வங்கத்தின் ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியுள்ள திருத்தந்தை,
இவ்வியாழன் காலை எட்டு இந்திய திருச்சபைத் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள்
குறித்து உரையாடினார். ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ, துணை ஆயர் வினய்
கண்டுல்னா ஆகியோர் முதலில் திருத்தந்தையை தனியாகச் சந்தித்த பின், பீகாரின் பாட்னா பேராயர்
வில்லியம் டி சூஸா, ஜார்கண்டின் டால்டன்கஞ்ச் ஆயர் கபிரியேல் குஜூர், தும்கா ஆயர் ஜூலியஸ்
மராண்டி, கும்லா ஆயர் பால் அலோய்ஸ் லாக்ரா, ஹசாரிபக் ஆயர் சார்ல்ஸ் சொரெங் மற்றும் ஜம்ஷெட்பூர்
ஆயர் ஃபெலிக்ஸ் டோப்போ ஆகியோரும் திருத்தந்தையை சந்தித்து உரையாடினர்.