2011-05-18 16:06:13

125ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு தயரித்து வருகிறது திருச்சூர் உயர்மறைமாவட்டம்


மே 18, 2011. கேராளாவின் திருச்சூர் உயர்மறைமாவட்டம் துவக்கப்பட்டதன் 125ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இடம்பெற உள்ள ஓராண்டுக் கொண்டாட்டத்தை இம்மாதம் 20ந்தேதி, வெள்ளியன்று இந்தியாவிற்கானத் திருப்பீடத்தூதுவர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ துவக்கி வைக்க உள்ளார்.
இந்த ஓராண்டு கொண்டாட்டங்கள், வரும் ஆண்டு மே மாதம் நிறைவுக்கு வரும் என்ற திருச்சூர் பேராயர் மார் ஆண்ட்ரூஸ் தழத், இக்கொண்டாட்டங்களுக்கான அழைப்பு திருத்தந்தையிடம் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த உயர் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு நிறைவு கொண்டாட்டங்கள், 1986ம் ஆண்டு திருத்தந்தை இர்ண்டாம் ஜான் பாலால் துவக்கிவைக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார் பேராயர்.1887ம் ஆண்டு ஒரு இலட்சம் கத்தோலிக்கர்களுடன் உருவாக்கப்பட்ட திருச்சூர் உயர்மறைமாவட்டத்தில் தற்போது ஐந்து இலட்சம் கத்தோலிக்கர்கள் உள்ளனர். இவர்களிடையே 506 குருக்களும் 3000 அருட்கன்னியர்களும் பணியாற்றுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.