பாப்பிறை அருள்பணி கழகங்களின் ஆண்டு கூட்டத்தில் பேராயர் Vacchelliயின்
செய்தி
மே 13,2011. இறைவனின் அருட்பணிகளில் ஈடுபடும்போது, நாம் தூய ஆவியாரின் கரங்களாய் செயல்பட
அழைக்கப்பட்டுள்ளோமே தவிர, இப்பணிகளின் நாயகர்களாய் நாம் விளங்குவதற்கு அல்ல என்று வத்திக்கான்
அதிகாரி ஒருவர் கூறினார். இத்திங்கள் முதல் வெள்ளி வரை உரோமையில் நடைபெற்ற பாப்பிறை
அருள்பணி கழகங்களின் ஆண்டு கூட்டத்தில் பேசிய நற்செய்தி பணிக்கான திருப்பீட பேராயத்தின்
துணைச் செயலரான பேராயர் Piergiuseppe Vacchelli இவ்வாறு கூறினார். உலகின் பல நாடுகளில்
கிறிஸ்தவர்களாய் வாழ்வதே ஒரு பெரும் சவாலாக மாறிவரும் நமது இன்றைய உலகில், நற்செய்திப்
பணியை இன்னும் தீவிரப்படுத்தவும், துயருறும் நம் கிறிஸ்தவ மக்களுடன் ஒன்றித்திருக்கவும்
நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று பேராயர் Vacchelli கூறினார்.அருட்பணியாளர்களை உருவாக்கும்
குருத்துவ இல்லங்களுக்கு விசுவாசிகள் எவ்விதம் உதவிகள் செய்ய இயலும் என்றும் பாப்பிறை
அருள்பணி கழகங்களின் ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.