2011-05-10 15:45:13

திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத்திற்கு புதிய தலைவர்


மே 10, 2011. நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஐவன் டயஸ் பணி ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அப்பேராயத்தின் தலைவராக பேராயர் ஃபெர்னாண்டோ ஃபிலோனியை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
1936ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ந்தேதி மும்பையில் பிறந்த கர்தினால் டயஸ், 75 வயது நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இவர் கானா, பெனின், டோகோ, கொரியா, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான திருப்பீடத்தூதராகவும், மும்பை பேராயராகவும் பணியாற்றியுள்ளார்.
நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடப் பேராயத்தின் புதியத் தலைவராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேராயர் ஃபிலோனி, 1946ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர். ஈராக், ஜோர்தான், மற்றும் பிலிப்பீன்ஸிற்கான திருப்பீடத்தூதராகச் செயலாற்றியுள்ள இவர், 2007ஆம் ஆண்டு முதல் திருப்பீடச்செயலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.