2011-05-09 15:55:54

புதிய அருளாளர் திருத்தந்தையின் நற்செய்தி அறிவிப்புப்பணி தொடர்கிறது


மே 09, 2011. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அருளாளராக அறிவிக்கப்பட்ட நாட்களில் அவர் சக்தியுடன் திரும்பி வந்தது போன்ற உணர்வை, செபத்திலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டிருந்த விசுவாசிகளிடையே காண முடிந்தது என்றார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
அந்நாட்கள் இறை அருளின் நாட்களாக இருந்தன என தன் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஒக்தாவா தியேஸ்' என்பதில் அறிவித்த இயேசு சபை குரு, அருளாளர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இரவும் காலையும் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தைச் சுற்றி காத்திருந்த கூட்டத்தில், சிறு குழந்தைகளைக் கொண்ட எண்ணற்ற குடும்பங்களைக் காணமுடிந்தது, இக்குழந்தைகளுக்கு முன்னாள் திருத்தந்தையைத் தெரியாதெனினும், இவர்கள் திருத்தந்தையைத் தெரிந்த இளைய சமுதாயத்தின் குழந்தைகள் என்றார்.
அஞ்ச வேண்டாம் என அனைவருக்கும் தன் வாழ்நாளின்போது அழைப்பு விடுத்த புதிய அருளாளர் திருத்தந்தை, இன்றும் வானுலகில் இருந்துகொண்டு உலகில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு உதவிக்கொண்டிருக்கிறார் என மேலும் கூறினார் திருப்பீடப்பேச்சாளர்.








All the contents on this site are copyrighted ©.