2011-05-09 16:01:18

இலங்கையில் 2 லட்சம் சிறார்கள் படிப்பைக் கைவிடுகின்றனர்


மே 09,2011. இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் சிறார்கள் பள்ளிப்படிப்பைக் கைவிடுவதாக இலங்கை சிறார் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை அதிகார அவை தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பாதிப்பு வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் ஊவா மாகாணங்களில் அதிகம் காணப்படுவதாகவும், யுத்தம், வறுமை மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் இது ஏற்படுகிறது என்றும் இலங்கையின் மகளிர் மற்றும் சிறார் நலத்துறை இணை அமைச்சரான ஹிஸ்புல்லா, கூறினார். இந்த நிலையை நீக்க யூனிசெப் அமைப்போடு இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு, பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, இலங்கையிலேயே இருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு சரியான கவனிப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், இது குறித்து தமது அமைச்சகத்துக்கு அறிவித்தால் தங்கள் அலுவலர்கள் குழந்தைகளின் நலனை உறுதி செய்ய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.