இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்த தலத்திருச்சபையின்
நிலைப்பாடு
மே05,2011. இந்த ஏப்ரல் 25ம் தேதி இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பல பன்னாட்டு அமைப்புகளும் தனிநபர்களும் ஆராய்ந்து
தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வறிக்கை குறித்து இலங்கை தலத்திருச்சபையின்
நிலைப்பாடு என்ன என்பது பற்றி அறிவதற்கு யாழ்ப்பாணம் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்களைத்
தொலைபேசியில் அழைத்துப் பேசினோம்