அருளாளர் இரண்டாம் ஜான்பாலுக்கு யூதமதத் தலைவர்களின் பாராட்டுரை
மே 05,2011. உலகிலுள்ள ஒட்டுமொத்த யூத மக்களின் ஆழ்மனதில் கரோல் வொய்டிவாவின் நினைவு
ஒளி நிறைந்ததாய் விளங்குகிறது என்று உரோமையில் உள்ள மூத்த யூதமதத் தலைவரான Rabbi Elio
Toaff கூறினார். அண்மையில் இரண்டாம் ஜான்பால் அருளாளராய் உயர்த்தப்பட்ட நிகழ்வையொட்டி
யூதமதத் தலைவர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டுத் தலைவர்கள் பகிர்ந்து கொண்ட செய்திகளை வத்திக்கான்
நாளிதழ் L’Osservatore Romano வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் உயர் அதிகாரியான
Yossi Peled மே மாதம் முதல் நாள் நடைபெற்ற இத்திருச்சடங்கில் தான் கலந்துகொண்டதை பெருமையுடன்
நினைவு கூர்ந்துள்ளார். அருளாளர் இரண்டாம் ஜான்பால் 2000மாம் ஆண்டு திருத்தந்தையாக
இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டதை அன்புடன் நினைவு கூர்ந்த இராணுவத் தலைவர் Peled,
அருளாளருக்கு யூத மக்கள் அனைவரின் சார்பாக தன் நன்றியையும் கூறினார்.கிறிஸ்தவத்திற்கும்,
யூத மதத்திற்கும் இடையே எழுந்திருந்த வலிமையான ஒரு கோட்டையை அருளாளர் இரண்டாம் ஜான்பால்
தன் கருணை கொண்ட கண்ணோட்டத்தால் தகர்த்தார் என்று உரோமை நகர் யூத மத குரு Rabbi Riccardo
Di Segni கூறினார்.