2011-05-04 15:45:48

இஸ்ரேல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளில் குழந்தைகளின் அவல நிலை - ஐ.நா.உயர் அதிகாரி


மே 04,2011. இஸ்ரேல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐ.நா.உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்ரேல் இராணுவத்தால் 1335 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனியப் பகுதிகளுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதரான Richard Falk கூறினார்.
குழந்தைகளை இரவில் கைது செய்வது, சிறைப்படுத்தப்பட்டக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள், தகுந்த காரணம் இன்றி இஸ்ரேல் இராணுவம் ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்று பல்வேறு அநீதச் செயல்களால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர் என்று Richard Falk கூறினார்.
இஸ்ரேல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாதென்ற சட்டம் இருப்பதால், இக்குழந்தைகள் பயில்வதற்கு பள்ளிகள் இல்லாமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத அநீதி என்றும் Richard Falk வலியுறுத்தினார்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் இராணுவம் நீக்கப்படுவதற்கு உலக அரசுகள் இஸ்ரேல் அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென்று ஐ.நா.உயர் அதிகாரி Richard Falk இந்த அறிக்கையின் இறுதியில் விண்ணப்பித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.