மே 26ம் தேதி மேரி மேஜர் பசிலிக்கா செல்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
மே03,2011. இத்தாலி ஒன்றிணைந்த நாடாக உருவானதன் 150ம் ஆண்டையொட்டி அன்னை மரியாவிடம் நாட்டை
அர்ப்பணிக்கும் நோக்கத்தில் இம்மாதம் 26ம் தேதி உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் நடைபெறவிருக்கும்
செப வழிபாட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய
ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ முன்வைத்த அழைப்பை ஏற்று மே 26ம் தேதி
வியாழன் மாலை 5.30 மணிக்கு மேரி மேஜர் பசிலிக்காவில் சொல்லப்படும் செபமாலை பக்தி முயற்சியில்
இத்தாலிய ஆயர்களுடன் திருத்தந்தையும் கலந்து கொள்வார் என்று பாப்பிறை இல்ல நிர்வாகம்
அறிவித்தது.