2011-05-03 16:23:42

பத்திரிகையாளர்களுக்கானப் பாதுகாப்பு குறைந்து வருகிறது - பான் கி மூன் கவலை


மே03,2011. அனைத்துலக பத்திரிகை சுதந்திர நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், பத்திரிகையாளர்களுக்கானப் பாதுகாப்பு குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
அரசுகள் தம் மக்களை அடக்கி அவர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தும் போது தவறான நடவடிக்கைகளை வெளியே அறிவிப்பதற்குப் பத்தரிகை சுதந்திரம் சக்தி வாய்ந்த கருவியாக இருக்கின்றது என்றும் அச்செய்தி கூறுகிறது.
இந்த அனைத்துலக பத்திரிகை சுதந்திர நாள் ஆப்ரிக்க பத்திரிகையாளர்களிடமிருந்து முதலில் உருவானது என்றுரைத்த பான் கி மூன், 2010ம் ஆண்டில் குறைந்தது ஆறு வலைத்தள நிருபர்கள் கொல்லப்பட்டனர் என்றும் 2008ம் ஆண்டில் முதன்முறையாக இந்த வலைத்தள நிருபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.