2011-05-03 16:22:43

ஊடகவியலார் புதிய டிஜிட்டல் ஊடகத்துறையைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறு அனைத்துலக கிறிஸ்தவச் சமூகத்தொடர்பு கழகம் வலியுறுத்தல்


மே03,2011. உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தையும் சமூகத்தொடர்பு உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு, ஊடகவியலார் புதிய டிஜிட்டல் ஊடகத்துறையைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறு WACC என்ற அனைத்துலக கிறிஸ்தவ சமூகத்தொடர்பு கழகம் கேட்டுக்கொண்டது.
மே 3ம் தேதி இச்செவ்வாய்க்கிழமை அனைத்துலக பத்திரிகை சுதந்திர நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்ட WACC கழகம் இவ்வாறு வலியுறுத்தியது.
தற்போதைய இணையதளம், சமூக வலைத்தள அமைப்புகள், புதிய தலைமுறையின் டிஜிட்டல் பயன்பாடு போன்றவை, பொறுப்பு, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, பாதுகாப்பு ஆகியவை குறித்த கவலையை அதிகரித்து வருகிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
21ம் நூற்றாண்டு ஊடகம் புதிய எல்லைகள், புதிய தடைகள் என்ற தலைப்பில் 2011ம் ஆண்டு அனைத்துலக பத்திரிகை சுதந்திர நாள் கடைபிடிக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.