2011-05-02 16:06:50

2030ல் இந்தியாவில் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும் என்கிறது சர்வதேச ஆய்வு ஒன்று


மே 02, 2011. இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்' என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
"உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்தியா தண்ணீர்ப் பற்றாக்குறையை சந்திக்கும். இது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்று இந்நிறுவனத்தின் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
2030ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை, 120 கோடியில் இருந்து 160 கோடி அல்லது 170 கோடியாக அதிகரிக்கும்போது, தண்ணீர்த் தேவையும் இருமடங்கு அதிகரிக்க உள்ள நிலையில், தேவையில் பாதியளவு பற்றாக்குறையாக இருக்கும்' என்றும் கூறப்பட்டுள்ளது.
"இந்தியாவின் தட்பவெப்பம் ஒன்று முதல் இரண்டு டிகிரி அதிகரிக்கும்' என்றும் அறிவியலாளர் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.